எம்.பி. குறிப்பிட் டார்.

உர்தூ ஒரு இனிமையான மொழி அதை புறக்கணித்து விட்டு சரித்திரத்தை எழுத முடி யாது. தொடர்ந்து உர்தூ மொழி புறக்கணிக்கப்பட் டால் போராட தயங்க மாட்டோம் என்றும் அவர் எச்சரித்தார்.
அப்துர் ரஹ்மான் பேச்சு
இதனைத் தொடர்ந்து வேலூர் நாடாளுமன்ற உறுப் பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசியதாவது- உர்தூ இந் நாட்டின் தேசிய மொழி. இந்த தேசத்திற்கு பெருமை சேர்த்த மொழி. உர்தூ இந் நாட்டின் கலாச்சார சின்னம். எல்லா வகையிலும் அம் மொழி முக்கியப்படுத்தப்பட வேண்டும்.
இங்கு முலாயம்சிங் அவர் கள் உர்தூ மொழி பற்றி குறிப்பிட்ட அனைத்தையும் நானும் வழிமொழிகிறேன். அவரது கூற்று 100 சதவீதம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. உர்தூ மொழிக்கான அனைத்து முக்கியத்துவத்தை யும் இந்த அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. குறிப்பிட் டார்.

Dr. பெரியார் தாசன் வரவேற்பு விழா நேரடி ஒளிபரப்பு

Broadcasting Live with Ustream.TV

வேலைவாய்ப்பு செய்தி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், அன்பான சகோதர சகோதரிகளுக்கு,கீழ் இணைத்துள்ள வேலை வாய்ப்புகளுக்கு நேரடி இன்டர்வியூ நடைபெறுகிறது. மேலும் சென்னையிலும் 18 மற்றும் 20 மார்ச் 2010 தேதிகளில் நடைபெறுகிறது. எனவே இந்த துறையில் உள்ள நம் சகோதரர்களுக்கு இச் செய்தியை அறிவித்து இந்தியாவிலேயே நல்ல வேலைவாய்ப்பை அமைத்துள்ள கொள்ள அல்லாஹ்விடம் உதவி தேடுவோம். இது நேரடி இன்டர்வியூ மட்டும் தான் இது சம்மந்தமான வேறு எந்த விபரங்கள் வேண்டுமாலும் இன்டர்வியூவில் கலந்து கொண்டு விளக்கம் கேட்கவும்.
.
My Career: TCS-BYB Walk-in Drive – Across India -20,21-March-2010
.

Daily Live Bayan

Bayan Insha Allah India Time: Chennai From 11/09/1430 (01/09/2009) onwards there will be live Bayan (Tamil) by As Sheikh Mufthi Omar Sheriff Insha Allah (Untill Notice)… India time 10:00 – 11:00 PM. Please Click Here to go to…

கோட்டகுப்பம் அப்துஸ் ஸமத் நத்வி ஹஸரத் காலமானார் தலைவர் பேராசிரியர் இரங்கல்

கோட்டகுப்பம், பிப்.22-

கோட்டகுப்பம் ரப்பானியா அரபிக் கல்லூரியில் தலைவரும், நாடறிந்த மார்க்க அறிஞருமான மவ்லானா மவ்லவி அப்துஸ் ஸமத் நத்வி ஹஸரத் 21-2-2009 சனிக் கிழமை இரவு 11.30 மணிக்கு காலமானார்.

மவ்லானா அப்துஸ் ஸமத் நத்வி சென்னை பல்லாவரம் மதரஸாவில் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் கண்ணியத்திற்குரிய தலைவர் காயிதெ மில்லத் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு அன்றிலிருந்து இன்று வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பால் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

சென்னை அஞ்சுமனே ஹிமாயத்துல் இஸ்லாம் பள்ளியின் ஆசிரியராக பணியாற்றியவர். மலேசியா ஈப்போவில் மதரஸாவை நிறுவி திறம்பட சேவையாற்றியவர்.

வானொலி மற்றும் இஸ்லாமிய பத்திரிகைகள் மூலம் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தவர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாட்டில் ஹகாயிதெ மில்லத் விருது| வழங்கி கவுரவிக்கப்பட்டவர்.

மவ்லானா மவ்லவி அப்துஸ் ஸமத் நத்வி ஹஜரத் மறைவு குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது-

மவ்லானா மவ்லவி அப்துஸ் ஸமத் நத்வி ஹஜரத் அவர்கள் தமிழக உலமாக்களின் தனித்து ஒளிசிந்திய நட்சத்திரம் போல் விளங்கியவர். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவர்களான கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத், சிந்தனை செல்வர் சிராஜுல் மில்லத், இப்ராஹீம் சுலைமான் சேட், குலாம் மஹ்மூது பனாத்வாலா உள்ளிட்ட தலைவர்களுடனும் என்னுடனும் மிகுந்த நேசம் பாராட்டி ஆழமான அன்பும், பாசமும் கொண்டு விளங்கியவர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகும், ஜமாஅத் துல் உலமா சபையும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்திய பெருமை ஹஜரத் அவர்களுக்கு உண்டு.

கோட்டகுப்பம் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியை நிறுவியதில் மிகப் பெரும் பங்காற்றியவர். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அக்கல்லூரியின் வளர்ச்சிக்காக மிகப் பெரும் பணியாற்றியவர்.

அவருடைய எழுத்தும், சொற்பொழிவுகளும் இஸ்லாமிய மார்க்கத்தின் பெருமையை நிலை நிறுத்தியதோடு அனைத்து சமுதாய மக்களையும் சன் மார்க்கத்தின்பால் ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்திருந்தது.

தமிழக அரபிக் கல்லூரி , மதரஸா கல்வி, மார்க்க கல்வி மக்கள் மத்தியில் சென்றடைய நத்வி ஹஜரத் போன்ற உலமாக்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர்.

ஆலிமின் மரணம் அகிலத்தின் மரணம் என்பர். அவரின் மறைவால் அறிவுலகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை அல்லாஹ் தன் கருணையால் நிரப்பிட அனைவரும் பிரார்த்திப்போமாக.

அன்னாரின் குடும்பத்தாருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்வதோடு அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவரும் பிரார்த் திக்க கேட்டுக்கொள்கின்றேன். ஜனாஸா இன்று (22-2-2009) இஷா தொழுகைக்குப் பின்னர் கோட்டகுப்பம் ஜாமிஆ மதரஸா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படு கின்றது.

கவிஞர் தஞ்சை நபிநேசன் காலமானார்

தஞ்சாவூர், பிப்.22-

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தஞ்சை மாவட்ட பொருளாளரும், தலைமை நிலைய பேச்சாளருமான சமுதாய கவிஞர் தஞ்சை நபிநேசன் (ஜியாவுதீன்) இன்று (22-2-09) அதிகாலை தஞ்சையில் காலமானார். அவரது ஜனாஸா நல்லடக்கத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளும், சமுதாயப் பிரமுகர்களும் பங்கேற்கின்றனர்.

தஞ்சை நபிநேசன் என்று பரவலாக அறியப்பட்ட எச். ஜியாவுதீன் 1992-ம் ஆண்டு முதல் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் சேவையாற்றி வருகிறார்.

தஞ்சை மாவட்ட காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர், மாநில காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர் போன்ற பதவிகளை வகித்த அவர் தஞ்சை மாவட்ட பொருளாளராக பதவியேற்று முஸ்லிம் லீகின் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

பூண்டி புஷ்பா கல்லூரியில் பி.எஸ்ஸி., பட்டம் பெற்ற அவர் அண்ணாமலை பல்கலைக்கழக அஞ்சல்வழி கல்வி மூலம் எம்.ஏ. பட்டம் பெற்றார். சிறந்த பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் மிக்க அவர் ஏராளமான நுல்களை எழுதியுள்ளார்.

விசா பறவைகள்|, புனித நபியே – புகழ் நிலவே|, பிரார்த்தனைப் பூக்கள்|, பச்சை வானில் பொன்விழா பிறைகள்|, தாஜ்மஹால் மனசு|, அண்ணல் நபியின் அற்புத அறிவுரைகள்|, என் நண்பனும் – தேநீர் கோப்பையும்|, புரியாத நட்சத்திரங்கள்| போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.

இலங்கை வானொலியில் இவரது உரைகள் இடம் பெற்றிருக்கின்றன.

கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை 5 மணியளவில் தஞ்சையில் அவரது இல்லத்தில் காலமானார்.

அவருக்கு தாயும், மனைவியும் உள்ளனர்.

இன்று மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் ஆற்றங்கரை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடி யில் அவரது ஜனாஸா நல்லடக்கம் நடை பெறுகின்றது.

கவிஞர் தஞ்சை நபிநேசன் மறைவு குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது-

கவிஞர் நபிநேசன் சிறந்த கவிஞர். கட்டுரையாலும், கவிதையாலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கொள்கை கோட்பாடுகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர். முஸ்லிம் லீகின் வரலாற்றையும், முன்னணி தலைவர்களை படம்பிடித்துக் காட்டுவதில் வல்லவராக திகழ்ந்து வந்தவர்.

சமுதாய எழுச்சிக்கும், மார்க்கத் துறையின் வளர்ச்சிக்கும், முஸ்லிம் லீகின் வலிமைக்கும் காலமெல்லாம் பணியாற்றிய நனிசிறந்த நல்லவர்.

முஸ்லிம் சமுதாயத்தினர் மற்றும் முஸ்லிம் லீகில் உள்ள ஒவ்வொரு வரையும் சரியாக எடைபோடுவதிலும் அவர்களின் பற்றி எழிலார்ந்த குணங்களை விளக்குவதிலும் வல்லவராக விளங்கியவர்.

அண்மையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மணிவிழா மாநாட்டில் பங்கேற்று விருதையும் பெற்றார்.

கவியரங்கம், பட்டிமன்றம், சர்வகட்சி கூட்டங்கள் அனைத்திலும் பங்கேற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகினுடைய கொள்கைகளை தெளிவாகவும், உறுதியாகவும் விளக்க கூடியவராக விளங்கி வந்தார்.

அவரின் மறைவு முஸ்லிம் லீகிற்கு பேரிழப்பாகும். தாய்ச்சபையின் சார்பில் மறைவுற்ற கவிஞர் நபிநேசனின் குடும்பத்தா ருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அவரின் மஃபிரத்துக்கு அனைவரும் துஆ செய்திட கேட்டுக்கொள்கின்றேன்.

stஹ்றீமீ="ஞிமிஷிறிலிகிசீ: தீறீஷீநீளீ; விகிஸிநிமிழி: 0ஜீஜ் ணீutஷீ 10ஜீஜ்; கீமிஞிஜிபி: 400ஜீஜ்; சிசிசிஸ்

ணீ>தமக ன் த யம்??பீவீஸ்>தமிழகம் எங்குபீவீஸ்>ணீ>மனிதஜீ>ணீ>ஜீ>ணீ> முஸ்லிம்கள் ஜீ><ணீ ஆரம்பிக்கப்ட மனத லீக்ஷீமீயீ=”லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/னீமீறீணீவீஸீணீsணீக்ஷீ.யிறிநி”><வீனீரீ stஹ்றீமீ="ஞிமிஷிறிலிகிசீ: தீறீஷீநீளீ; விகிஸிநிமிழி: 0ஜீஜ் ணீutஷீ 10ஜீஜ்; கீமிஞிஜிபி: 400ஜீஜ்; சிஹிஸிஷிளிஸி: லீணீஸீபீ; ஜிணிஙீஜி-கிலிமிநிழி: நீமீஸீtமீக்ஷீ" ணீறீt="" sக்ஷீநீ="லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tனீஜீஷீறீவீtவீநீs.ஸீமீt/யீவீறீமீs/ணீனீதீணீttuக்ஷீ/அட்டைக்

மெரீனா கடலில் குளித்த 4 பேர் சாவு:ஹெலிகாப்டரில் தேடுகிறார்கள்

கடலூரை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 23). இவரது தம்பி பிரேம்குமார்(வயது 18). இருவரும் ஹுண்டாய் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் துரைப்பாக்கம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்த நண்பர்கள் ராஜசேகர்(வயது 26),சந்தோஷ்குமார்(22),வினோத்குமார்(21),விக்னேஷ்வரன்(20) ஆகியோருடன் மெரீனா கடற்கரைக்கு சென்றனர்.

அங்கு சுற்றி பார்த்து விட்டு உழைப்பாளர் சிலை அருகே கடலில் குளிக்க இறங்கினர். விக்னேஸ்வரனை தவிர மற்ற 5 பேரும் கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி நீரில் மூழ்கினார்கள்.

இதை பார்த்த பொது மக்களில் சிலர் அவர்களை காப்பாற்ற கடலில் இறங்கினார்கள். அவர்களால் வினோத்குமார், பிரேம்குமார் ஆகிய இரு வரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.

ராஜசேகர், சந்தோஷ் குமார், பிரபாகரன் ஆகிய 3 பேரும் கடல் அலையில் சிக்கி பலியாகி விட்டனர். அவர்களது உடல்களை கண்டுபிடிக்க முடியாததால் அண்ணா சதுக்கம் போலீசில் வினோத்குமார் புகார் செய்தார்.

இதே சமயத்தில் வடபழனி பஜனை கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 18) என்பவரும் நண்பர்கள் 9 பேருடன் உழைப்பாளர் சிலை அருகே குளித்த போது கடல் அலையில் சிக்கி பரிதாபமாக இறந்து விட்டார்.

இவரது உடலும் கிடைக்காததால் அண்ணா சதுக்கம் போலீசில் புகார் செய்தனர்.

மீனவர்கள், தீயணைப்பு படையினர் உதவியுடன் 4 பேரையும் போலீசார் கடலில் தேடினார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் இன்று கடற்படை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி நடந்தது.

 

Thanks

India Tamil News

திருக்குர்ஆன் மென் பொருளுடன் LG நிறுவனத்தின் டிவி அறிமுகம்!

உலகிலேயே முதன் முறையாக திருக்குர்ஆன் மென்பொருளை தன்னகத்தே கொண்ட தொலைக் காட்சிப் பெட்டிகளைத் தயாரிக்கிறது தென் கொரியாவின் பிரபல நிறுவனமான எல்.ஜி
இம்மாதம் முதல் சந்தைக்கு வரும் 42 இன்ச் மற்றும் 50 இன்ச் ப்ளாஸ்மா டிவிக்களில் இந்த மென்பொருள் நிறுவப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கின்றன.

ரமளான் மாதத்தில் உலகமெங்கும் இஸ்லாமியர்கள் திருக் குர்ஆனை ஓதுவதைக் கருத்தில் கொண்டு இந்த ரமளானில் ‘குர் ஆன் டி.வி’கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இதன் மூலம் ஸி.டி, டி.வி.டி ப்ளேயர் போன்றவை இணைக்காமலும் கேபிள் டிவி, சாட்டலைட் / டிஷ் ஆண்டெனா போன்ற இணைப்பு ஏதுமின்றி வெறும் தொலைக்காட்சிப் பெட்டியைக் கொண்டே குர்ஆனின் அத்தியாயங்கள் மற்றும் அதன் வசனங்களைப் பார்வையிடவும் அழகிய குரலில் ஓதுதலைக் கேட்கவும் முடியும்.

160 ஜி.பி கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க் வசதி கொண்ட இந்த டி.வியில் இதற்கான மென்பொருள் டி.வியின் ரிமோட் கண்ட்ரோல் மூலம் விரும்பிய பக்கங்களைப் பார்வையிடவும், விருப்பமுள்ள இறை வசனங்களை சேமித்துக்கொள்ளவும் (Bookmark) தன்னகத்தே கொண்ட அகவசதிகள் செய்யப்பட்டுள்ளன.

டிஜிட்டல் புரட்சிக்குப் பின்னர் சர்வதேச அளவில் முஸ்லிம்கள், குர்ஆனை டிவிடி ப்ளேயர்களின் மூலமும், சாட்டலைட் சேனல்களின் மூலமும் பெருமளவு பயன்படுத்துவதைப் புள்ளிவிபரங்கள் மூலம் அறிந்து தனது வியாபாரத்தில் இந்தத் திட்டத்தினைப் புகுத்தியுள்ளது எல்.ஜி நிறுவனம்.

எல்.ஜி நிறுவனத்தின் எலக்ட்ரானிக்ஸ் பிரிவின் வைஸ் பிரஸிடெண்ட் திரு. பார்க் ஜோங்-சியோக் அவர்கள் இந்த டி.வியை அறிமுகப் படுத்துவதற்கான சிறப்புப் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் “சர்வதேச அளவில் முஸ்லிம்கள் இறை வேதமான குர்ஆனைத் தங்களது தினசரி வாழ்வில் ஓதி வருவதைக் கணக்கில் கொண்டே இந்தத் திட்டத்தினை அறிமுகப் படுத்தியுள்ளோம்” என்கிறார்.

நன்றி
சத்தியமார்க்கம்

நெல்லிக்குப்பத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றாவிட்டால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லா பேச்சு

நெல்லிக்குப்பம், ஆக. 13-

நெல்லிக்குப்பத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றாவிட்டால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று நெல்லிக்குப்பத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் த.மு.மு.கழகத்தின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

விழிப்புணர்வு கூட்டம்

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகர த.மு.மு.க. சார்பில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சின்னதெருவில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.எம்.ஜின்னா தலைமை தாங்கினார். ஹாவாமொய்தீன், அப்துல்காதர், அப்சில்ஹாதி, ஹாவா நஜிமுதீன், தீன், சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத்தலைவர்அப்துல் ரஹீம் வரவேற்றார்.

கூட்டத்தில் த.மு.மு.க. மாநிலத்தலைவர் டாக்டர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அனுமதி வழங்க வேண்டும்

அரசியல் தூய்மையற்றதாக உள்ளதால் தற்போது தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் அதே சமயம் பேரிடர்கள், சுனாமி, சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறது. தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் பல லட்சம் செலவு செய்கிறார்கள். வெற்றி பெற்றதும் செலவு செய்ததை விட பல மடங்கு சம்பாதித்து விடுகிறார்கள்.

எங்கு குண்டு வெடித்தாலும் முஸ்லிம்கள்தான் காரணம் என்று காவல் துறையினர் பொய் வழக்கு போடுகின்றனர். சுதந்திர தினத்தன்று தீவிரவாதத்தை எதிர்த்து மதுரையில் நடைபெறும் அணி வகுப்புக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். அணி வகுப்பு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுதான் நடைபெறும். பயங்கரவாதத்தை முதலில் கையில் எடுத்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்.தான் முஸ்லிம்கள் அல்ல.

உண்ணாவிரத போராட்டம்

நெல்லிக்குப்பம் பகுதியில் குறுகலான முக்கிய சாலை ஓரத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்ற கோரி நெல்லிக்குப்பம் நகர த.மு.மு.க. சார்பில் மாவட்ட கலெக்டர், தாசில்தார், நகராட்சி கமிஷ்னர் ஆகியோருக்கு மனு கொடுத்தும் பயன் இல்லை. உடனடியாக நெல்லிக்குப்பத்தில் உள்ள டாஸ்மார்க் கடையை அகற்றாவிட்டால் மாவட்ட தலைவர் தலைமையில் கடையை அகற்றும் வரை உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு மாநிலத்தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் மாநில செயலாளர்கள் அப்துல் சமது, ஜுனைத், ஷேக்தாவூத் (கடலூர்) மாவட்ட துணை தலைவர் முகமது உசேன், பக்ருதீன், அல்லரஹ்மான், அப்துல்காதர், பாய்துல்லாஹ், முகமது ரபீக் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் நகர செயலாளர் அசரப் அலி நன்றி கூறினார்.