உர்தூ ஒரு இனிமையான மொழி அதை புறக்கணித்து விட்டு சரித்திரத்தை எழுத முடி யாது. தொடர்ந்து உர்தூ மொழி புறக்கணிக்கப்பட் டால் போராட தயங்க மாட்டோம் என்றும் அவர் எச்சரித்தார்.
அப்துர் ரஹ்மான் பேச்சு
இதனைத் தொடர்ந்து வேலூர் நாடாளுமன்ற உறுப் பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசியதாவது- உர்தூ இந் நாட்டின் தேசிய மொழி. இந்த தேசத்திற்கு பெருமை சேர்த்த மொழி. உர்தூ இந் நாட்டின் கலாச்சார சின்னம். எல்லா வகையிலும் அம் மொழி முக்கியப்படுத்தப்பட வேண்டும்.
இங்கு முலாயம்சிங் அவர் கள் உர்தூ மொழி பற்றி குறிப்பிட்ட அனைத்தையும் நானும் வழிமொழிகிறேன். அவரது கூற்று 100 சதவீதம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. உர்தூ மொழிக்கான அனைத்து முக்கியத்துவத்தை யும் இந்த அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. குறிப்பிட் டார்.
Filed under: Uncategorized